தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை : மதுரை ஆணையர்..!

கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் விஜய் மதுரை செல்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளார் விஜய். இதனை முன்னிட்டு காலை 10 மணி முதலே மதுரை விமான நிலையம் பகுதியில் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் குவிந்து வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை செல்லும் விஜய் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார். காவல்துறை அனுமதி இன்றி ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையர் லோகநாதன் எச்சரித்துள்ளார் அனுமதி பெறாமல் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆணையரின் இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களையும் ரசிகர்களையும் கவலை அடைய செய்துள்ளது. இருப்பினும் தடையை மீறி விஜய்யின் ரோடு ஷோ நடைபெறுமா..?