இனி ஆதரவு இல்லை..! பாஜகவிற்கு அளித்த ஆதரவு வாபஸ் : நவீன் பட்நாயக்..!

நாடாளுமன்ற தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. மறுபக்கம் 147 தொகுதிகளுக்கு 78 தொகுதிகளை கைப்பற்றி ஒடிசாவில் முதல்முறையாக பாஜக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.நவீன் பட்நாயக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். இக்கட்சிக்கு 9 ராஜ்ய சபா எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் இவர்கள் பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தனர். லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறார் நவீன் பட்நாயக்.