இனி கிளாம்பாக்கத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் பெண் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல் துறை சார்பில் முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.
* காவல்துறையில் பதிவு செய்த ஆட்டோக்களை மட்டுமே கிளாம்பாக்கம் எதிரிலிருந்து இயக்க வேண்டும்.
* கிளாம்பாக்கத்தில் ஆட்டோவில் ஏறும் முன் பயணிகள் ஓட்டுனரின் பதிவுச் சான்றிதழைப் பரிசோதிக்கலாம்.
* பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.