இனி வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் வசூல்.. 3 முறை தான் இலவச வாய்ப்பு !

நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் முறை இன்று முதல் மாறுகிறது. அதாவது இனி OTP முறையில் எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் புதிய விநியோகத்தை செயல்படுத்துகின்றனர்.
இது மட்டுமல்லாமல், சிலிண்டர் முன்பதிவுக்காக எண்ணை இண்டேன் நிறுவனம் மாறிவிட்டது. இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு புதிய எண் குறித்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இண்டேன் வாடிக்கையாளர்கள் இனி 7718955555 என்ற புதிய எண்ணை எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இது தவிர, வாட்ஸ்அப்பிலும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரில் REFILL என தட்டச்சு செய்து 7588888824 க்கு அனுப்பவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே இந்த செய்தியை அனுப்பவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாடு முழுவதும் மீண்டும் தேஜாஸ் ரயிலை இயக்கத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும் திரும்பப் பெறுவதற்கும் பாங்க் ஆப் பரோடா கட்டணம் வசூலிக்கும். மற்ற வங்கிகளும் இது குறித்து விரைவில் முடிவை எடுக்கலாம்.
இப்போது நடப்புக் கணக்கு, பணக்கடன் வரம்பு மற்றும் ஓவர் டிராஃப்ட் கணக்கு போன்றவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய சேவைக்கு கட்டணங்களை நிர்ணயித்துள்ளன. சேமிப்பு வங்கி கணக்கில் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான தனி கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் 3 முறைக்குப் பிறகு கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது, அவர்கள் ரூ .150 கட்டணம் செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் 3 முறை வரை டெபாசிட் செய்ய இலவசமாக இருக்கும். இதன் பின்னர், பணத்தை டெபாசிட் செய்ய 40 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in