1. Home
  2. தமிழ்நாடு

வட்டி கிடையாது... பெண்களுக்கு ரூ. 5 லட்சம் தரும் அரசின் அருமையான திட்டம்..!

1

இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் எல்லா துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக தடம் பதித்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் நலனுக்காக அரசும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒன்றிய அரசு லக்பதி திதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து தற்போது முழுமையாக பார்க்கலாம்.


மூன்று கோடி பெண்களை செல்வந்தர்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு 'லக்பதி திதி யோஜனா' திட்டம் கொண்டு வரப்பட்டது. மகளிருக்கான நிதியுதவியை மேம்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தின் வாயிலாக, வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. பெண்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின் மூலம், தகுதி வாய்ந்தவர்கள் ரூ. 5 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.


சுயதொழில் துவங்கி தொழில்முனைவோர்களாக விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தின் வாயிலாக கடன் பெறலாம். தங்களின் பொருளாதார நிலையையும் மேம்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு பெண்கள் சுய உதவிக் குழுவில் (SHG) இணைந்திருக்க வேண்டும். கடன் பெறுவதற்கான செயல்முறைகளை இந்த குழுக்கள் எளிதாக்கும். இதன் மூலமாக எளிமையான வகையில் இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் பெறலாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒன்றிய அரசால் 'லக்பதி திதி ஜோஜனா' திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தொழில் துவங்குவதற்கான திட்டத்துடன், தேவையான ஆவணங்களுடன் SHG அலுவலகத்தை அணுகி லக்பதி திதி யோஜனாவின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் தகுதியான நபர்கள் ரூ. 5 லட்சம் வரை கடன் பெற்று, வட்டி எதுவும் இல்லாமல் அசல் தொகையை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.

லக்பதி திதி யோஜனா திட்டம் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, வேலை வாய்ப்பு வழங்குவது, அவர்களுக்கான வருமானத்தை அதிகரிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு விண்ணப்பத்தாரர் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவராகவும், ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இத்திட்டத்தின் கீழ் கடனை பெறுவதற்கு 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். லக்பதி திதி யோஜனா திட்டம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை நோக்கங்களாக கொண்டுள்ளது. மேலும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பெண்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
தொழில் துவங்குவதற்கான பயிற்சியும், வழிகாட்டுதலும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஆதார், பான் கார்டு, வருமானச் சான்று, வங்கி பாஸ்புக், மொபைல் நம்பர் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கான திட்டத்துடன் லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனிலும், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கான இலக்கு 3 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like