1. Home
  2. தமிழ்நாடு

வருமானத்தில் எந்தவித முன்னேற்றம் இல்லையா? அஷ்டமி அன்று இரவு மிளகை வைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள்..!

1

கடினமான உழைப்பாலும் பணத்தை சம்பாதிக்கிறோம். ஒரு சிலருக்கு மட்டும் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அந்த உழைப்பிற்கு ஏற்ற பணம் வராமல் இருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சியில் தடைகள் ஏற்பட்டு இருக்கும். இவை அனைத்தும் நீங்கி வருமானம் அதிகரிப்பதற்கு வளர்பிறை அஷ்டமி திதி அன்று இரவு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்


இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமி திதியில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தேய்பிறை அஷ்டமி திதியிலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு அஷ்டமியில் இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் நமக்கு வருமானத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகும். இதற்கு நமக்கு மிளகு மட்டும் இருந்தால் போதும். 48 எண்ணிக்கையில் மிளகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கருப்பு நிற துணியில் இந்த மிளகை போட்டு அதை கருப்பு நிற நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள்.

அஷ்டமி அன்று இரவு வீட்டில் இருக்கக்கூடிய யாராவது ஒருவர் இந்த மூட்டையை தங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் அதை எடுத்து கால் படாத இடத்தில் அல்லது ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக மாதத்திற்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறைகள் அனைத்தும் விலகி வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். முக்கிய குறிப்பு குடும்பத்தில் இருக்கக்கூடிய யாராவது ஒருவர் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதும். அனைவரும் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது.

கால பைரவருக்கு உகந்த மிளகை வைத்து அஷ்டமி அன்று இரவு இந்த முறையில் பரிகாரம் செய்ய வருமானம் பெருகுவதற்குரிய வாய்ப்புகள் வந்து சேரும்

Trending News

Latest News

You May Like