1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 4-ம் தேதி வரை ட்ரோன்கள் பறப்பதற்கு தடை..!

1

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. வாக்கு பதிவுகள் முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு உரிய முறையில் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது பள்ளி, கல்லூரி போன்ற தேர்தல் ஆணையம் நியமித்த இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4-ம் தேதி அன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் நெல்லையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரியை சுற்றி இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடியும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்க வேண்டும் என்று நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் மூர்த்தி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like