ஓபிஸ்-க்கு அடுத்த ஷாக்..! ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடையில்லை..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8224827bb074f535b654938a7e177128.jpeg?width=836&height=470&resizemode=4)
ஓபிஎஸ், அவரது மகன் ஓ.ரவீந்தரநாத் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரிக்க தடை கோரி ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்ததோடு, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.