இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய ஸ்பான்சர்கள்..!
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.), இந்தியாவில் நடத்தும் சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்கான புதிய ஸ்பான்சர்களை நேற்று ஒப்பந்தம் செய்து அறிவித்துள்ளது.
அதன்படி நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர்களாக ரிலையன்ஸ் குழுமத்தின் கேம்பா (Campa) மற்றும் ஆட்டம்பெர்க் டெக்னாலஜிஸ் (Atomberg Technologies) நிறுவனங்களை பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பாண்டு முதல் 2026 வரை இந்தியாவில் நடைபெறும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஸ்பான்சர்களாக இவை செயல்பட உள்ளன.