1. Home
  2. தமிழ்நாடு

புதிய திட்டம் - தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை..!

1

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுபானம் நிறுவனம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 7 மாவட்டங்களில் பகுதி வாரியாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும், இதன் மூலம் 97 சதவிகித பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாமல், 45 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், அதில் ரூ.15 கோடி வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இதுவரை 16 மாவட்டங்கலில் மட்டும் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரும் ஏப்ரல் 2025 முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஏப்ரல் மாதம் முதல் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்துவதற்கு வரவேற்பு தெரிவித்த நீதிபதிகள், மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட பணத்தை தமிழகத்தின் நீர்நிலை மற்றும் வன மேம்பாட்டுக்காக பயன்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துடன் பாட்டில்களின் மூடியை மாற்றுவதா? அல்லது திரும்ப பெறுவதா? என அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like