1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்..!

1

ஒவ்வொரு மாதமும் எரிவாயு நிறுவனங்கள், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலைகளை திருத்துகின்றன. அதாவது, 1 ஆம் தேதி இவற்றின் விலைகளில் அதிகரிப்பு அல்லது குறைவு இருக்கும். சில நேரங்களில் எந்த மாற்றமும் இல்லாமலும் இருக்கலாம். மே 1 ஆம் தேதியும் சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இன்று மே 1 முதல் ATM பயன்படுத்தும் நபர்கள் இனி கூடுதல் கட்டணங்களை செலுத்துவதற்கு சற்று தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ATM சார்ஜ் கட்டணத்தை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17ல் இருந்து, ரூ.2 ஆக அதிகரிக்கப்பட்டு ரூ.19 ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும்.

இந்த ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டு முறை ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது. இதன் விளைவு, வங்கியின் நிலையான வைப்பு நிதிக் கணக்குகள் முதல் கடன்கள் வரையிலான வட்டி விகிதங்களில் காணப்பட்டது. பல அரசு மற்றும் பெரிய தனியார் வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. பல வங்கிகள் வரும் காலங்களிலும் வட்டி விகிதங்களை மாற்றக்கூடும்.

மே 1 முதல் கிராமப்புற வங்கிகளில் பெரிய மாற்றம் ஏற்படலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்து கிராமப்புற வங்கிகளையும் இணைத்து ஒரு பெரிய வங்கியை உருவாக்கும் திட்டம் உள்ளது. இந்தப் பணி ஒரு மாநிலம், ஒரு ஆர்ஆர்பி திட்டத்தின் கீழ் செய்யப்படும். இந்த மாற்றம் முதலில் 11 மாநிலங்களில் காணப்படும். மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவை இதில் அடங்கும்.

 

இந்திய ரயில்வே மே 1 (May 1) முதல் இந்த விதிமுறையை அமல்படுத்தக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஐஆர்சிடிசி (IRCTC) மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் டிக்கெட் உறுதிப்படுத்தப்படவிட்டால் அது தானாகவே ரத்து செய்யப்படும். பின்பு இதுபோன்ற சூழ்நிலையில் தான் பலர் டிக்கெட் கவுண்டரில் இருந்து காத்திருப்பு டிக்கெட்டுகளை எடுத்து ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் மே 1-ம் தேதி முதல் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்பிறகு ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் பயணம் செய்வது முழுமையாகத் தடை செய்யப்படும். அதேசமயம் எந்தவொரு பயணிக்கும் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் காத்திருப்பு டிக்கெட் இருப்பது கண்டறியப்பட்டால் டிக்கெட் பரிசோதகர் அவருக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது பொது பெட்டிக்கு அனுப்பலாம்.

 

முன்பு கூறியபடி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் பயணிக்கும் மக்களின் வசதிக்காகத் தான் இந்த விதிமுறை உருவாக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதுவும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் தங்கள் பயணத்தில் போது காத்திருப்பு டிக்கெட்டுகளை கொண்ட பயணிகளால் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று இந்திய ரயில்வே அமைப்பு கூறியுள்ளது.சில சமயங்களில் காத்திருப்பு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகளின் இருக்கைகளில் அமர முயற்சிக்கின்றனர். இது அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே இந்த சிரமத்தைப் போக்கத் தான் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாராவது காத்திருப்பு டிக்கெட்டுகளுடன் ரயில்களில் பயணம் செய்தால் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் சமீபத்தில் இந்தியாவில் முதல் முறையாக நாசிக் அருகே உள்ள மன்மாட் முதல் மும்பை வரை இயக்கப்படும் பஞ்சவாடி எக்ஸ்பிரஸ் (Panchavati Express) ரயிலில் ஏடிஎம் (ATM) இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏடிஎம் இயந்திரம் பஸ் நிலையம், ரயில் நிலையில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும். தற்போது முதல் முறையாக மத்திய ரயில்வே மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர்சாதனப் பெட்டியில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. அதுவும் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாகப் பெட்டியின் பின்புறத்தில், ஏற்கனவே தற்காலிக சரக்கு அறையாகப் பயன்படுத்தப்பட்ட இடத்தில் தான் இந்த ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், ரயிலின் 22 பெட்டிகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு இருப்பதால் ஏடிஎம் இயந்திரத்தை மக்கள் எளிதில் அணுக முடியும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதுபோன்ற ஏடிஎம் வசதி கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுங்கச்சாவடிகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தப் போவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், நாடு தழுவிய அளவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடிகளை செயல்படுத்துவதற்கான இறுதி தேதி என்று எதுவும் இல்லை என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) தெளிவுப்படுத்தியுள்ளது. மே 1, 2025 முதல் செயற்கைக்கோள் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையை செயல்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like