புதிய தேசிய கல்விக் கொள்கை...கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம்- மத்திய அரசு…
மத்திய அரசால் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கை நாடுமுழுவதிலும் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மும்மொழிக்கொள்கை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொள்கை மீதான தங்களின் கருத்தை இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கென இரண்டு இணைய தள ஐடிக்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.