1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 1-முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர்..!

1

நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில் புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷியா சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

இந்த மூன்று சட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 21-ம் தேதி பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு டிசம்பர் 25-ம் தேதி இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது, 

இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த புதிய சட்டங்கள் தொடர்பாக அனைத்து சட்ட பல்கலைக்கழகங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

Trending News

Latest News

You May Like