ஆதாருக்காக புதிய ஆப் அறிமுகம்..! முக்கிய அம்சங்கள் என்ன..!

ஆதார் கார்டு அனைத்து விதமான தேவைகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. சிம் கார்டு வாங்குவது, வங்கியில் கணக்கு ஓபன் செய்வது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காகவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் யுபிஐ மூலமாக ஆன்லைன் பேமென்ட் செலுத்துவதை போன்று ஆதார் சரிபார்ப்பும் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆதார் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார். இதன் மூலமாக ஆதார் முற்றிலும் டிஜிட்டல் முறையில் மாறவுள்ளது. இதனால் இந்திய குடிமக்கள் மிக எளிதாக ஆதாரை அணுகலாம். அத்துடன் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
ஆதார் புதிய செயலில் மூலமாக ஃபேஸ் ஐடியை பயன்படுத்தி ஆதாரை பயன்படுத்தலாம். இதனால் நகலை எப்போதும் கையிலே வைத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை. ஆதாரை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) இணைந்து இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. QR குறியீடு அடிப்படையிலான உடனடி சரிபார்ப்பு, ஃபேஸ் ஐடி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இந்த புதிய ஆப்பில் உள்ளது.
இந்த ஆப் தற்போது சோதனையில் உள்ளது. யுபிஐ மூலமாக ஆன்லைன் பேமன்ட் செலுத்துவதை போன்று ஆதார் சரிபார்ப்பு புதிய ஆப் மூலமாக எளிமையாக மாறும் என்று அஸ்வினி வைஷ்ணவி கூறியுள்ளார். மேலும், இந்த டிஜிட்டல் முறையில் ஆதார் விவரங்களை சரிபார்த்தது தேவையான இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
ஆதார் புதிய ஆப்பின் மூலமாக ஹோட்டல் செக்-இன், ஷாப்பிங் உள்ளிட்ட பல இடங்களில் ஆவணங்களை எளிதாக சமர்பிக்கலாம். இதனால் நகல்களை எங்கும் ஒப்படைக்க தேவையில்லை. இதனால் ஆதார் தகவல்கள்கள் பாதுகாக்கப்படும் என கூறப்படுகிறது. பயனரின் ஒப்புதலும் தேவையான தகவல்களை மட்டும் ஆதார் ஆப்பில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.