வெளியான புதிய அறிவிப்பு: மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் ..!

தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுய உதவிக் குழுக்கள் கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமார் 54 லட்சம் பெண்கள் உள்ளனர்.மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதன் மூலம் குழு உறுப்பினர்கள் பல சலுகைகளை பெற முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள சுமார் 60 லட்சம் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அனைத்து பெண்களுக்கும் அடையாள அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை வழங்கும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக அரசு உருவாக்கிய சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்படும்.
இரண்டாம் கட்டமாக NGO எனப்படும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினா்களுக்கு அட்டை வழங்கப்படும்.இந்த அடையாள அட்டையில் சில தகவல்கள் இருக்கும். உறுப்பினர் பெயர், மகளிர் சுய உதவிக் குழு பெயர், பிறந்த தேதி, ரேசன் அட்டை எண், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட எண், இரத்த வகை, முகவரி, தொடர்பு எண் மற்றும் க்யூ ஆர் கோடு ஆகியவை அதில் இருக்கும்.அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்களுக்கு சில சலுகைகள் உண்டு.
அவர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம். ஆனால், ஏசி பேருந்துகளில் இந்த சலுகை கிடையாது.கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும்போது 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
அதாவது, "மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருக்கும் பெண்கள், ஏசி பேருந்துகளை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 25 கிலோ வரை தயாரிப்பு பொருட்களை கட்டணமின்றி எடுத்த செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.சுய உதவிக் குழு அடையாள அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு வேறு சில சலுகைகளும் உண்டு.கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கும் கடன் உதவி திட்டங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆவின் நிறுவனப் பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இணைய சேவை மையங்களில் சேவைகளைப் பெறும்போது 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.ஆவின் நிறுவன பொருள்களை சலுகை விலையில் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இணைய சேவை மய்யங்களின் சேவைகளைப் பெறும் போது, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.