1. Home
  2. தமிழ்நாடு

முக்கிய அறிவிப்பு : ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உண்மையில்லை..!

1

நாடு முழுதும், 557 நகரங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், நேற்று முன்தினம் (மே 06) 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் வெளியேறினர். அதனைத் தொடர்ந்து சுமார் 4 மணி அளவில் கேள்வித்தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை. தேர்வு முடிவதற்கு முன்பே வலுக்கட்டாயமாக வெளியேறிய மாணவர்கள் வினாத்தாளை இணையத்தில் பரப்பினர். மாலை 4 மணியளவில் தான் வினாத்தாள் பரப்பப்பட்டது. அதற்கு முன்பே தேர்வுகள் துவங்கிவிட்டன'' என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. ராஜஸ்தான் மாணவர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரங்களில் நாடு முழுவதும் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு தொடர்பாக ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் என சுமார் 24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். வழக்கம் போல், தேர்வறைக்கு அனுமதிக்கும் முன்பாக மாணவ, மாணவிகளிடம் கெடுபிடியான சோதனைகள் செய்யப்பட்டன.

Trending News

Latest News

You May Like