1. Home
  2. தமிழ்நாடு

"நீ நான் காதல்" தொடரின் நாயகனுக்கும் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணம்..!

1

தமிழில் மைதானம், சோக்காளி, அப்புச்சி கிராமம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சுவாசிகா தமிழில் அறிமுகமானது கோரிப்பாளையம் திரைப்படம் மூலம் தான். 

சின்னத்திரையில் தொடங்கிய நடிகை சுவாசிக்காவின் பயணம் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் மலையாள திரையுலகம் பக்கம் நுழைந்தவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிய மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.  மம்மூட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் சிபிஐ 5ம் பாகம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர் மாடலும் நடிகருமான பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் ‘மனம் போல மாங்கல்யம்’ என்ற மலையாள சின்னத்திரை தொடரில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர்.ஜேக்கப் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார் 

இந்நிலையில் இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 26-ம் தேதி திருவனந்தபுரத்தில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. கொச்சியில் 27-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றனர்.

Trending News

Latest News

You May Like