ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா - விக்கி..!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி, அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். உயிர் ருத்ரோ நீல் - உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் - விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தங்கள் இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.