1. Home
  2. தமிழ்நாடு

2026 மார்ச்சுக்குள் இந்தியாவில் இருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் - அமித்ஷா..!

1

பிஜாப்பூர் குத்ரு சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் ஐஇடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த விபத்தில் 8 ஜவான்கள், ஒரு ஓட்டுநர் உட்பட 9 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். பல வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நக்சல் நடவடிக்கைக்குப் பிறகு வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது நக்சலைட்டுகள் குத்ரு சாலையில் பதுங்கியிருந்து IED குண்டுவெடிப்பு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “பிஜாப்பூரில் (சத்தீஸ்கரில்) IED குண்டுவெடிப்பில் DRG வீரர்கள் உயிரிழந்த  செய்தியால்  மிகவும் வருத்தம் அடைந்தேன். துணிச்சலான வீரர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  எங்கள் ராணுவ வீரர்களின் தியாகம் வீண் போகாது, மார்ச் 2026க்குள் இந்தியாவில் நக்சலிசத்தை ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார். கடந்த 2  ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய மிகக் கொடிய தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.  

Trending News

Latest News

You May Like