1. Home
  2. தமிழ்நாடு

பஹல்காம் தாக்குதல் - திருமணமான 7 நாட்களில் உயிரிழந்த கடற்படை அதிகாரி!

Q

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான விநய் நார்வால், கொச்சியில் இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பிய அவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடைபெற்றது.

தொடர்ந்து விநய் நார்வால் தனது மனைவியுடன் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் மனைவி கண் முன்பே அவர் கொல்லப்பட்டார். திருமணமாகி 7 நாட்களில் கடற்படை அதிகாரி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி நாட்டு மக்கள் மனதையும் உலுக்கியுள்ளது..

Trending News

Latest News

You May Like