1. Home
  2. தமிழ்நாடு

நாளை நவராத்திரி ஆரம்பம் : இந்த 7 பொருட்களை வாங்கினால் வெற்றியும், அதிர்ஷ்டமும் குவியும்..!

1

 நவராத்திரி இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 02ம் தேதி விஜயதசமி திருநாளுடன் நிறைவடைகிறது. இந்த சமயத்தில் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வீட்டில் வைப்பதால் வெற்றி, அதிர்ஷ்டம் ஆகியவற்றை ஈர்க்கும் என சொல்லப்படுகிறது.

நவராத்திரியில் வாங்க வேண்டிய 7 பொருட்கள் :

1. துர்கை யந்திரம் - துர்கை யந்திரம் என்பது துர்கா தேவியின் சக்திகள் நிறைந்தது ஆகும். நவராத்திரியின் போது இந்த யந்திரத்தை வைத்து வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். வீட்டிலும், வேலை மற்றும் தொழிலிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து, நன்மைகள் அதிகம் நடைபெறும். இதை தினமும் வழிபட்டு வந்தால் நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் பெருகும்.

2. கலசம் - சாரதா நவராத்திரியின் போது குடத்தில் தண்ணீர் நிரப்பி, மாவிலை, தேங்காய் வைத்து தயாரிக்கப்படும் கலசத்தை தயாரித்தோ அல்லது வாங்கியோ வைக்கலாம். கலசம் என்பது பெருக்கம், நிறைவு ஆகியவற்றை குறிப்பதாகும். வீட்டில் கலசம் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும், ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

3. சிவப்பு ஆடைகள் - நவராத்திரியின் போது சிவப்பு நிற ஆடைகள் அணிவது, தானம் செய்வது, வாங்குவது ஆகி அனைத்தும் அதிர்ஷ்டத்தை தரக் கூடியதாகும். சிவப்பு நிறம் பலம், செல்வம் வளம் ஆகியவற்றை குறிப்பதாகும். துர்கைக்கு விருப்பமான நிறம் என்பது இது நன்மைகளை அதிகம் தரும்.

4. பழங்கள் - நவராத்திரியின் போது துர்கைக்கு பழங்கள், உலர் பழங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு. இது நன்றி செலுத்தி, ஆசிகளை பெறுவதாகும். இது இனிமை மற்றும் வளத்தை குறிப்பதாகும். அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை நன்மைகளை அதிகம் தரக் கூடியவை ஆகும்.

5. மலர்கள் - நவராத்திரியின் போது அம்பிகைக்கு சாமந்தி, தாமரை, ரோஜா ஆகியவற்றை படைத்து வழிபடுவது சிறப்பு. இது அன்பு மற்றும் மரியாதையின் அடையாளம் ஆகும். அழகிய, வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, அம்மனை அர்ச்சனை செய்து வழிபடுவதால் அம்பாளின் மனம் மகிழும்.

6. குங்குமம் - அம்பிகை மங்கள ரூபிணி என்பதால் நவராத்திரி காலத்தில் குங்குமம் வாங்கி அம்பிகைக்கு படைத்து வழிபடுவதும், நெற்றியில் வைத்துக் கொள்வதும், மற்றவர்களுக்கு வழங்குவதும் அம்பிகையின் அருளை பெற்றுத் தரும். திருமணமான பெண்கள் எப்போதும் நெற்றியில் குங்குமம் அணிந்து கொள்வதால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. பூஜையில் குங்குமம் வாங்கி வைத்து வழிபடுவது வளர்ச்சி, அமைதி, அதிர்ஷ்டத்தை தரும்.

7. நெய் விளக்கு - நவராத்திரி பூஜையின் போது ஒரே ஒரு நெய் விளக்காவது ஏற்றி வைத்து வழிபடுவதால் வாழ்வில் இருக்கும் இருள் விலகி, ஒளிமயமான எதிர்காலம் அமையும். அறிவு, ஆன்மீக விழிப்புநிலை ஏற்படும். நெய் விளக்கு, தெய்வீகத்தின் அடையாளம் என்பதால் இதை ஏற்றி வைத்து வழிபடும் போது அம்பிகை அதில் எழுந்தருளி ஆரோக்கியம், செல்வம், வெற்றியை தருவாள் என்பது நம்பிக்கை. வீட்டில் காலை, மாலை இரு வேளையும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வீட்டில் எப்போதும் தெய்வீக சக்தியை நிலைத்திருக்க செய்யும்.

Trending News

Latest News

You May Like