சென்னை விமான நிலையத்தில் ரூ.14.20 கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!
எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கென்யா நாட்டை சேர்ந்த பெண் பயணியின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியபோது போதைப்பொருட்கள் அதிகப்படியாக இருப்பது தெரியவந்தது.
அந்த பெண் பயணியிடம் இருந்து, மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான ரூ.14.20 கோடி மதிப்புள்ள கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் யாருக்காக போதைப்பொருட்கள் கடத்தி வந்தார். இவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.