இன்று நரசிம்ம ஜெயந்தி : இந்த நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்..!

நரசிம்ம ஜெயந்தி அன்று செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் :
1. நரசிம்ம ஜெயந்தி அன்று சுத்தமான சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அசைவம், மது, பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். இதனால், உடல் சுத்தமாக இருக்கும். ஆன்மீக சிந்தனைகள் மனதில் நிறைந்திருக்கும்.
2. இந்த புனித நாள் நரசிம்மரை வழிபடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளேயும், வெளியேயும் சுத்தமாக இருக்க வேண்டும். யாரையும் அவமதிக்கக் கூடாது. குறிப்பாக பெரியவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை மதிக்க வேண்டும்.
3. நரசிம்மர் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்று நம்பப்படுகிறது. மற்றவர்களை மதிக்காமல் இருப்பது கடவுளின் கோபத்தை உண்டாக்கும். எனவே, எல்லோரிடமும் கருணை, பணிவு மற்றும் இரக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
4. நரசிம்ம ஜெயந்தி அன்று நீலம் அல்லது கருப்பு நிற ஆடைகளை அணியக்கூடாது. இவை கெட்ட நிறங்களாக கருதப்படுகின்றன. ஆன்மீக உணர்வையும், கடவுள் பக்தியையும் காட்டும் ஆடைகளை அணிய வேண்டும்.
5. மஞ்சள், சிவப்பு அல்லது காவி நிற ஆடைகளை நரசிம்ம ஜெயந்தி அன்று அணிவது நல்லது. இந்த நிறங்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், தெய்வீக சக்தியையும், செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
6. நரசிம்ம ஜெயந்தி அன்று பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். உடல் உறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பிரம்மச்சரியம் ஆன்மீக சக்தியை அதிகரிக்கும் என்றும், கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்று தரும் என்றும் நம்பப்படுகிறது.
7. நரசிம்ம ஜெயந்தி அன்று இரவில் வீட்டை இருட்டாக வைக்கக்கூடாது. வீட்டை ஒளிரச் செய்ய வேண்டும். நரசிம்மர் இறங்கி வந்து ஆசீர்வாதம் வழங்குவார் என்று கூறப்படுகிறது.
8. நரசிம்மருக்கு பிடித்தமான பானகம், மோர், துளசி ஆகியவற்றை படைத்து வழிபடுவது அவரது மனதை குளிர செய்து, அருளை பெற்றுத் தரும்.