நீர்மட்டம் 49 அடியாகக் குறைந்ததால் முழுமையாகத் தெரியும் நந்தி சிலை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/65d64c99ce922c3d50c3ba5f115f62e9.png?width=836&height=470&resizemode=4)
மேட்டூர் அணையில் மொத்தம் 120 அடி உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும். அவ்வணையின் நீர்மட்டம் 70 அடிக்குக் கீழ் குறையும்போது, நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருக்கும் நந்தி சிலையின் தலைப்பாகம் மட்டும் வெளியில் தெரியும்.
இந்நிலையில், இம்முறை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியது. இவ்வாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடிக்கு இறங்கியதும் நந்தி சிலையின் தலை வெளியே தெரியத் தொடங்கியது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர்த் தேவைக்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் 50 அடிக்குக் கீழே சரிந்தது.
இதனையடுத்து, பண்ணவாடி நீர்த்தேக்கப் பகுதியில் மூழ்கியிருந்த 20 அடி உயரம் கொண்ட நந்தி சிலை, அதன் பின்புறம் 10 அடி உயரத்திற்கு ஜலகண்டேசுவரர் கோவிலின் கோபுர முகப்புப் பகுதி வெளியில் தெரியும்படி காட்சியளிக்கிறது.