பொதுக் கழிப்பிடத்தில் இடம்பெற்றிருந்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்..!

கோவை மாநகராட்சி அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.
புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் அவர்களின் பெயரும் எழுதப்பட்டு இருப்பது கவனம் பெற்றது. இந்த பெயர்கள் இந்த வளாகங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகவும் மாறியது. இது குறித்து அரசியல்வாதிகள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் அது பரபரப்பானது.
இந்த நிலையில் தலைவர்கள் பெயர்களை வைக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையர் எடுத்துரைத்து நேற்று பெயர்களை மட்டும் நீக்கி உள்ளனர். இன்று முழுவதுமாக வண்ணம் பூசப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் அவர்களின் பெயரும் எழுதப்பட்டு இருப்பது கவனம் பெற்றது. இந்த பெயர்கள் இந்த வளாகங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகவும் மாறியது. இது குறித்து அரசியல்வாதிகள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததால் அது பரபரப்பானது.
இந்த நிலையில் தலைவர்கள் பெயர்களை வைக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆணையர் எடுத்துரைத்து நேற்று பெயர்களை மட்டும் நீக்கி உள்ளனர். இன்று முழுவதுமாக வண்ணம் பூசப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.