1. Home
  2. தமிழ்நாடு

இடைத்தேர்தலில் திமுக உடன் நேரடியாக மோதுகிறது நாம் தமிழர் கட்சி..!

1

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இம்முறை பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் விலகி கொண்டன.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025ல் அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் போட்டியிடவில்லை. இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையில் நேரடி போட்டி நிலவும் சூழல் வந்திருக்கிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் தேவையற்ற செலவை குறைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால் சமீப காலமாக ஆளும் திமுகவிற்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

 

இத்தகைய சூழலில் இவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி என்பதை தாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தால் ஆளுங்கட்சியின் குறைகளை மக்கள் மன்றத்தில் சுட்டிக் காட்ட வாய்ப்பாக இருக்கும். ஆனால் அந்த விஷயத்தை கோட்டை விட்டு விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக உடன் நேரடியாக மோதுவதால் அதிமுக, பாஜகவை தாண்டி பிரதான எதிர்க்கட்சி நாம் தமிழர் என்ற பிம்பம் உருவாகியிருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. ஏனெனில் திமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரிக்க பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இல்லை.

எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே விழும். இதன்மூலம் அதிக வாக்கு சதவீதம் பெறுவர். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் 7.65 சதவீதமும், 2023 இடைத்தேர்தலில் 6.35 சதவீதமும் வாக்குகளை பெற்றனர். தற்போது 10 சதவீதத்திற்கு மேல் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. சமீபத்தில் தான் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

 

Trending News

Latest News

You May Like