1. Home
  2. தமிழ்நாடு

கசிந்த தகவல் : அதிமுக - பாஜக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைய வாய்ப்பு..!

1

அதிமுக- பாஜக இடையே சமீபத்தில் கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவே நேரடியாக சென்னைக்கு வந்து அதிமுக- பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டார்.

மேலும் இந்தக் கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென நிர்வாகிகளுக்கு அவர் அசைன்மென்ட் கொடுத்ததாக தெரிய வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 18- ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்து தான் போட்டியென திட்ட வட்டமாக தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

ருப்பினும் பாஜக- அதிமுக கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இடம்பெறுவதற்கான பேச்சுவார்த்தை திரைமறைவில் நடைபெற்று வருவதாக தான் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இடம்பெறவில்லை என்றால், தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


பொதுவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை அளவு கடந்து விமர்சித்தது கிடையாது. சில சமயங்களில் பாராட்டவும் செய்திருக்கிறார்.அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றாலும் கூட அதிமுகவின் கரமே ஓங்கி இருப்பதால், அக்கூட்டணியில் நாம் தமிழர் கட்சி இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருவேளை அதிமுக, பாஜக, நாம் தமிழர் கூட்டணி அமைந்து தேர்தல் களத்தை அவர்கள் சந்தித்தால், அரசியல் நிலவரமே வேறு மாதிரி இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் இடங்களில் சரி பாதிக்கும் மேலான இடங்களை தட்டித் தூக்கி எம்.எல்.ஏ பதவிகளை உத்தரவாதப்படுத்திவிடும் என்றும் கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


இதை மையமாக வைத்து தான் தனித்துப் போட்டி என்று சீமான் அறிவித்தாலும், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் சுணக்கம் காட்டுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதுவரை இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இதன் மூலம் அந்த இரண்டு தொகுதிகளையும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கினால் கூட சீமானால் கேட்டு பெற்றுவிட முடியும் என்ற மனக்கணக்கில் தான், அந்த தொகுதியில் வேட்பாளர் பெயர் விவரத்தை அவர் முன்கூட்டியே அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
 

Trending News

Latest News

You May Like