MyV3Ads நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் - கோவை காவல் துறை..!

MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப பெறாதவர்கள் ஆவணங்களுடன் புகார் தெரிவிக்கலாம் என கோவை போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்த நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சக்தி அனந்தன் எனும் நபர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் மொபைல் ஆப் ( செயலி) மூலம் தினசரி விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாரிக்கலாம் எனவும், அதுவே உறுப்பினராக ரூ. 60 ரூபாய் முதல் ரூ.1,21,000 வரை உள்ள திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
கோவை கிராஸ் கட் சாலையில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி நிலையில், தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் பணம் செலுத்தி உறுப்பினரானவர்கள் மூலம் இந்த நிறுவனத்திற்குள் பல கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு அதற்கேற்ப ஆயுர்வேத மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தது போல பணமும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் வந்தன. இந்த நிறுவனம் மோசடி செய்வதாக புகார்கள் காவல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் மீது மோசடி தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சக்தி அனந்தன் எனும் நபர் கோவையை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தின் மொபைல் ஆப் ( செயலி) மூலம் தினசரி விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாரிக்கலாம் எனவும், அதுவே உறுப்பினராக ரூ. 60 ரூபாய் முதல் ரூ.1,21,000 வரை உள்ள திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்தால் அதிக வருமானம் கிடைக்கும் என விளம்பரம் செய்யப்பட்டது.
கோவை கிராஸ் கட் சாலையில் இதன் தலைமை அலுவலகம் இயங்கி நிலையில், தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் இயங்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் பணம் செலுத்தி உறுப்பினரானவர்கள் மூலம் இந்த நிறுவனத்திற்குள் பல கோடி ரூபாய் பணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதலீடு செய்தவர்களுக்கு அதற்கேற்ப ஆயுர்வேத மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தது போல பணமும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த நிறுவனத்திற்கு எதிராக புகார்கள் வந்தன. இந்த நிறுவனம் மோசடி செய்வதாக புகார்கள் காவல் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகி, பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல் பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.