1. Home
  2. தமிழ்நாடு

செருப்பு, ஷூக்களை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம கும்பல்.. மக்கள் அதிர்ச்சி..

செருப்பு, ஷூக்களை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம கும்பல்.. மக்கள் அதிர்ச்சி..


நடிகர் செந்தில் ஒரு திரைப்படத்தில் பத்து பைசா மட்டும் தான் தர்மம் பெறுவார்.. அதை விட கூடுதலாக பணம் கொடுத்தாலும் வாங்கமாட்டார். இப்படியோரு கதாபாத்திரம் அப்படத்தில் இருக்கும்.

அதேபோன்று எங்களுக்கு ஷு மட்டும் தான் வேண்டும்.. அதை மட்டும் தான் நாங்கள் திருடுவோம் என ஒரு கும்பல் திருடி வருவது தெரியவந்துள்ளது. சென்னை சூளை பகுதியில் உள்ள வங்கியில் கேஷியராக பணிபுரிந்துவருபவர் சந்தானம். இவர் அப்பகுதியில் உள்ள வெங்கடாசலம் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் உள்ள ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த செருப்புகள் மற்றும் ஷுக்கள் தொடர்ச்சியாக காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் மூன்று ஜோடி புதிய செருப்புகள் மற்றும் ஷூக்கள் காணாமல் போயுள்ளது.

இதனால் இவரது குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் மர்ம நபர் ஒருவர் மாலை 4 மணி அளவில் வீட்டுக்குள் வந்து ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று ஜோடி புதிய செருப்பு மற்றும் ஷூக்களை திருடி பாலீத்தீன் பைகளில் போட்டு எடுத்து செல்வது தெரியவந்தது.

ஏற்கனவே இரண்டு முறை இவரது வீட்டில் இதுபோல புதிய ஷூக்கள் மற்றும் செருப்புகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால், இது குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

செருப்பு, ஷூக்களை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம கும்பல்.. மக்கள் அதிர்ச்சி..

குறிப்பாக கடந்த 2 மாதங்களில் வெங்கடாசலம் தெரு, பேக்கர்ஸ் சாலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தொடர்ச்சியாக செருப்பு மற்றும் ஷூக்களை திருடி செல்லும் சம்பவம் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

செருப்பு மற்றும் ஷூக்களை திருடி வருவது ஒரே நபரா? அல்லது ஒரு கும்பலாக இவர்கள் செயல்படுகிறார்களா? என்பது குறித்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like