1. Home
  2. தமிழ்நாடு

கதறும் மனைவி..! 10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையை கொடுத்துட்டு என் புருஷன் உயிரை எடுத்துட்டியே கடவுளே..!

1

விழுப்புரத்தை சேர்ந்தவர் சாரதி(28) மற்றும் இவரது மனைவி சத்தியபிரியா(27). இந்த தம்பதிக்கு திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு சத்தியபிரியா கர்ப்பம் அடைந்ததால் குடும்பத்தினர் உள்ள அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நடந்த சோகம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 23ம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிள்ளார் சாரதி. அப்போது நீளமான கம்பியை தூக்கிச் சென்ற போது உயரழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சாரதி படுகாயம் அடைந்தார். உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாரதி பரிதாபமாக உயிரிழந்தார். 

சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு நேற்று காலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவரது மனைவிக்கு தீடிரென பிரசவ வலி ஏற்படவே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியாமல் சத்தியபிரியா கதறி துடித்த சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையை கொடுத்துட்டு என் புருஷன் உயிரை எடுத்துட்டியே கடவுளே என கதறும் மனைவி பார்த்து கதறி அழும் உறவினர்கள்.

Trending News

Latest News

You May Like