1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் 1 லட்சம் பேருக்கு பிரியாணி வழங்கி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்..!

1

நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மிலாடி நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை, உக்கடம், ஆத்துப்பாலம், கரும்பு கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றது.

இத்துடன் மிலாடி நபி பண்டிகையின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதமாக ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ஜமாத் சார்பில் இலவசமாக பிரியாணிகள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 1 லட்சம் பேருக்கு இன்று பிரியாணி வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதாக கூறப்பட்டது.

Trending News

Latest News

You May Like