முருக பக்தர்கள் மாநாடுக்கு அனுமதி! ஆனால்...

மதுரையில் முருக பக்தர்களுக்கான மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.முருக மாநாட்டிற்கு பக்தர்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதிலும் முருக மாநாடு நடத்த குழுவினர் திட்டமிட்டுள்ளனா். இந்த மாநாடுகளில் முருக பக்தர்கள் குடும்பத்துடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாநாட்டு குழு சார்பில் அழைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முருகன் மாநாடு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் இறுதியில் நீதிமன்றம் மாநாடு நடத்த அனுமதி அளித்துள்ளது. எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆன்மீகம் என்ற பெயரில் அரசியலை முன்னெடுக்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முருக மாநாடு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. இதனால் முருக பக்தர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வருகிற ஜூன் 22 மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அன்றைய நாள் இரவு 3 மணி முதல் 8 மணி வரை அம்மா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில், ஜூன் 10 முதல் அறுபடை முருகன் கோயில்களின் சிற்றுப் பிரதிகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் பெற அனுமதிக்கப்படும்.
அப்போது பிரபல ஆன்மிக மற்றும் அரசியல் தலைவர்கள், திரைத்துறை, சமூக சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு, "கந்த சஷ்டி கவசம்" மற்றும் "திருப்புகழ்" பாடல்களை லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே வாத்தியத்தில் பாராயணம் செய்வர். மேலும் காவடி, பால்குடம் மற்றும் பாத யாத்திரைக் கூட்டங்கள் பக்தி பூர்வமாக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
மாநாட்டிற்காக, அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், எல்இடி திரைகள் போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆன்மிக மற்றும் இந்து விழிப்புணர்வு நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து, 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்ட 3 நாள் மாநாடு பழனியில் வெற்றிகரமாக நடந்ததன் தொடர்ச்சியாக இந்த முறை மதுரையில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தென்னிந்திய பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவதாக தான் மாநாட்டு குழு நம்பிக்கை வைக்கிறது. இதற்காக குடும்பத்தினருடன் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள முருகன் மாநாட்டை சங்கி மாநாடு என அமைச்சர் சேபர் பாபு விமர்சித்து இருந்தார். இந்த விவகாரத்தில் பாஜக மற்றும் திமுக இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்து காணப்படுகிறது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இத்தகைய சூழலுக்கு மத்தியில் உயர் நீதிமன்ற மதுரை கிளை, முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் காவல் துறை முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.