1. Home
  2. தமிழ்நாடு

தாயின் கள்ளக்காதலன் வெறி.. 11 வயது மகளையும் சீரழிப்பு.. சிறுமி சோக மூடிவு !

தாயின் கள்ளக்காதலன் வெறி.. 11 வயது மகளையும் சீரழிப்பு.. சிறுமி சோக மூடிவு !


புதுக்கோட்டை சேங்கதோப்புவை சேர்ந்த கணேசன்(32) பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் அதேபகுதியில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த 32 வயது பெண்ணுடன் கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பழக்கம் இருவரும் தனியாக சந்தித்துக்கொள்ளும் அளவுக்கு கள்ளத்தொடர்பாக மாறியது.

அப்பெண்ணின் வீட்டுக்கு கணேசன் அடிக்கடி சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்பெண்ணிற்கு 11 வயதில் மகள் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் கணேசனுக்கு, அந்த 11 வயது மகள் மீதும் மோகம் ஏற்பட்டுள்ளது.

தாயின் கள்ளக்காதலன் வெறி.. 11 வயது மகளையும் சீரழிப்பு.. சிறுமி சோக மூடிவு !

இந்தசூழலில் நேற்றுமுன்தினம் கணேசன் வழக்கம்போல் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அப்பெண் வெளியில் சென்றதை தெரிந்து கணேசன் தனியாக இருந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

பின்னர் தான் வாங்கி வந்த குளிர்பானத்தை சிறுமிக்கு கொடுத்து குடிக்க சொல்லியுள்ளார். அதை வாங்கி குடித்த சிறுமி சிறுது நேரத்தில் மயங்கிவிழுந்தார். கணேசன் சிறுமியை சீரழிக்க திட்டம்போட்டு ஏற்கனவே அந்த குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளார்.

தாயின் கள்ளக்காதலன் வெறி.. 11 வயது மகளையும் சீரழிப்பு.. சிறுமி சோக மூடிவு !

பின்னர் மயக்கம் அடைந்த அந்த சிறுமியை கணேசன் பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து சென்றுவிட்டார். தூக்கம் கலைந்து கண்விழித்த சிறுமி தனது அலங்கோல நிலையை பார்த்து, தனக்கு நடந்த கொடூரத்தை எண்ணி அதிர்ச்சி அடைந்தார். மேலும் மனஉளைச்சலில் இருந்த சிறுமி அவமானத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின்பேரில் கணேஷ்நகர் போலீசார், போக்சோ சட்டம், தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இது தொடர்பாக சிறுமியின் தாயிடமும் விசாரணை நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like