1. Home
  2. தமிழ்நாடு

வேலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பலி..!!

வேலூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் பலி..!!


கோவையை சேர்ந்த வெங்கட், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தொடர் விடுமுறை நாள் என்பதால் வேலூரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். நண்பரை சந்தித்துவிட்டு குடும்பத்துடன் மீண்டும் பெங்களூரு புறப்பட்டார்.

அப்போது, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மாடுக்கில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கட் மனைவி, மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like