வெள்ளத்தில் சிக்கிய குட்டியை வாயில் கவ்விக் காப்பாற்றும் தாய் நாய் - நெகிழ்ச்சி வீடியோ !

கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் பல பகுதிகள் கடந்த வாரம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அம்மாநிலங்களின் பல இடங்களில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சாலையெங்கும் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தந்த மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நாய் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய தனது குட்டியை மீட்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. , விஜயபுரா மாவட்டம், தரப்பூர் கிராமத்தில் தாய் நாய், தனது குட்டியை வாயில் பிடித்துக்கொண்டு முழங்கால் ஆழமான நீர் வழியே கடக்கிறது. பின்னர் சிறிது தூரம் சென்று நீர் இல்லாத இடத்திற்கு கொண்டு
#WATCH Karnataka: A female dog rescues her puppy and shifts it to a safer location in flood-affected Tarapur village of Vijayapura district. Several parts of the state are reeling under flood, triggered due to rainfall. (17.10.2020) pic.twitter.com/0BgWCl4kDq
— ANI (@ANI) October 18, 2020
செல்கிறது. இச்சம்பவம் பார்ப்பவரின் அனைவர் மத்தியிலும் நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
newstm.in