1. Home
  2. தமிழ்நாடு

கொசு விரட்டும் மருந்தால் தீ விபத்து- 3 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்..!!

mosquito
கொசுவை விரட்டும் மருந்து பாட்டில் இளகி தீ பிடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துவுள்ள மணலியைச் சேர்ந்தவர் உடையார். ஆன்லைன் மூலமாக உணவு டெலிவிரி செய்யும் வேலையில் உள்ளார். சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

அதற்காக வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக் கொள்ள உடையாரின் மனைவி மருத்துவமனையில் இரவு தங்கிவிடுவது வழக்கம்.

வீட்டில் பாட்டி சந்தானலட்சுமி (60), சிறுமிகளான சந்தியா (10), ரக்‌ஷிதா (8), சந்தான பவித்ரா (7) ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். வழக்கம் போல நேற்றிரவு பாட்டியும் மூன்று சிறுமிகளும் தூங்கச் சென்றனர்.

இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 4 பேரும் சடலமாக இருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தியபோது இரவில் கொசு விரட்டி மருந்து பாட்டில் இளகி தீப்பற்றியுள்ளது. அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் மணலி சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மணலிப் பகுதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Trending News

Latest News

You May Like