பத்திரப் பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்!

முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அதிகரிக்கும் என்பதற்காக, நாளைய கூடுதல் 'டோக்கன்'கள் வழங்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது
நாளை முகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும் என்று பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.