1. Home
  2. தமிழ்நாடு

25க்கும் மேற்பட்ட அரசு மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி..!

1

கடலூர் மாவட்டம் வரகூர்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் வழக்கம் போல இன்று மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்ற நிலையில், மீதமிருந்த உணவை எடுக்கும்போது அதில் பூரான் இருந்ததை பார்த்த சத்துணவு ஊழியர்கள் உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளி வளாகத்திற்கு விரைந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடையே விசாரித்தபோது ஒரு சில மாணவர்கள் தங்களுக்கு மயக்கம் மற்றும் வாந்தி வருவதாக கூறியதாக தெரிகிறது.

உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25க்கும் மேற்பட்ட மாணவர்களின் 108 வாகனம் மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இந்த நிலையில் மாணவர்கள் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து அவர்களது பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு என்ன விதமான தொந்தரவு உள்ளது என மருத்துவர்கள் விசாரித்து அதற்கு தற்போது தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like