அடுத்த 3 மணி நேரத்திற்கு 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
“நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தென்காசி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.