1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா வைரசை விட ஆபத்தானது! அமெரிக்கா மக்கள் பீதி..!

Q

சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் வெளியானது. இருப்பினும், இந்த தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்தது. சீனா தான் கொரோனா வைரஸை பரப்பி "பயோ-வார்" நடத்துவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டின.
அதன் பிறகு கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மீண்டும் உலகம் பழையபடி செயல்பட தொடங்கியது. இந்த சூழ்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்சமயம் அதிகரித்து வருகிறது.
ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை போல அமெரிக்காவும் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் கடும் சிரமத்தை சந்தித்தது.
இந்தச் சூழலில் அமெரிக்காவில் நச்சுத்தன்மை வாய்ந்த பூஞ்சை பாதிப்பு சமீப நாட்களாக அதிகரித்து வருவதாக மருத்துவ இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் இந்த பூஞ்சை வைரஸ் ஆனது கொரோனா தொற்றைக் காட்டிலும் அதிபயங்கரமானது என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.
இது தொடர்பாக கார்டன் ஜி. ஜாக் என்பவர் அமெரிக்காவுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில், நச்சுத்தன்மை வாய்ந்த பூஞ்சை பாதிப்பிலிருந்து அமெரிக்கா தன்னை காத்துக் கொள்ள வேண்டுமெனில், சீனா உடனான தொடர்பை அந்நாடு முற்றிலும் துண்டிக்க வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், பூஞ்சை வைரஸின் பாதிப்பு அதிக அளவில் இருக்காது என்றும் வேளாண் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது வேளாண் கருவிகள் பூஞ்சை தாக்குதலை எளிதில் எதிர்கொள்ளும் தன்மை வாய்ந்தவை என வேளாண் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், வேளாண் கருவிகளால் பூஞ்சை வைரஸை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கு நச்சுத்தன்மை வந்த பூஞ்சை வைரஸ் பரவியதற்கு சீனாவை சேர்ந்த இருவர் தான் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சன்யாங் லிங் என்பவர், தனது காதலியை தேடி அமெரிக்கா வந்த போது அமெரிக்காவில் நச்சுத்தன்மை வாய்ந்த பூஞ்சை தாக்குதலை அவர் பரப்பியதாக புகார் பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் கொரோனா வைரஸை காட்டிலும் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சுத்தன்மை வந்த பூஞ்சை வைரஸின் தாக்கம் அமெரிக்காவில் பரப்பப்பட்டு வருவதாகவும் அமெரிக்க நீதித்துறை அச்சம் தெரிவித்துள்ளது. பூஞ்சை வைரஸ் தாக்கிய பயிர்களில் கதிர் முளையிலேயே அழுக தொடங்கி விடும். இதனால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர் மதிப்பில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like