1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிப்பு ?

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிப்பு ?


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 30ம் தேதி வரை ஊரடங்கு 5 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு நீடித்தாலும்,  படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியதால் தலைநகர் சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்துக்கு போனது. இதையடுத்து, 4 மாவட்டங்களிலும் வரும் 30 ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிப்பு ?

தொடர் பாதிப்பால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  கடந்த 24ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் , தற்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் அவர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

வரும் 29ம் தேதி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like