1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் வங்கி கணக்கில் பணம்..!

1

என்.எல்.சி. நிறுவனம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி-யின் பணிகளால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு இன்று முதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க விவசாயிகளுக்கு இன்று முதல் பயிர் இழப்பீடு வழங்கப்படும் எனவும் என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நெய்வேலியில் நிலம் கையகப்படுத்துதல் சிறப்பு துணை ஆட்சியரிடம் காசோலையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like