1. Home
  2. தமிழ்நாடு

ஃபோட்டோ ஷூட் என அழைத்து மாடல் அழகிக்கு பாலியல் வன்கொடுமை!!

ஃபோட்டோ ஷூட் என அழைத்து மாடல் அழகிக்கு பாலியல் வன்கொடுமை!!


ஃபோட்டோஷூட் என்று அழைத்து வந்து மாடல் அழகியை மூன்று நாட்கள் லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மாடல் அழகிக்கு அறிமுகமான சலீம் (33) என்ற நபர் ஃபோட்டோஷூட் என்று கொச்சிக்கு அழைத்துள்ளார். அவரை காக்கநாட் எனும் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள கிறிஸ்டீனா ரெசிடென்சி என்ற லாட்ஜில் தங்கவைத்தார்.

இரண்டு நாட்கள் ஃபோட்டோஷூட் செய்த நிலையில், இரவு தனது ரூமுக்கு வருமாறு சலீம் அழைத்துள்ளார். தனது ஃபோனில் இருந்த சில மாடல் அழகிகளின் செக்ஸ் வீடியோக்களை காட்டி, இவர்கள் எல்லாம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். நீயும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நிர்பந்தித்ததாக தெரிகிறது.

ஃபோட்டோ ஷூட் என அழைத்து மாடல் அழகிக்கு பாலியல் வன்கொடுமை!!

அந்தப் பெண் மறுக்கவே, அந்த லாட்ஜின் ஓனரான கிறிஸ்டீனா மூலம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததால் அந்த மாடல் அழகி தனது ரூமில் மயக்க நிலைக்கு சென்றார்.

இதனையடுத்து மாடல் அழகியின் அறைக்குள் நுழைந்த சலீம் மற்றும் அவரின் நண்பர்கள் அஜ்மல், ஷமீர் ஆகியோர் சேர்ந்து மாடல் அழகியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டனர்.

ஃபோட்டோ ஷூட் என அழைத்து மாடல் அழகிக்கு பாலியல் வன்கொடுமை!!

அப்பெண்ணை மூன்று நாட்கள் லாட்ஜில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். அங்கிருந்து தப்பித்த அந்தப் பெண் இது குறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் லாட்ஜ் ஓனர் மற்றும் மூவர் மீது புகார் அளித்தார்.

போலீசார் அந்த லாட்ஜை மூடி சீல் வைத்திருக்கின்றனர். கிறிஸ்டினா உள்ளிட்ட நால்வர் தலைமறைவாக இருந்த நிலையில் சலீமை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like