1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசின் நடவடிக்கைக்கு மு.க ஸ்டாலின் வரவேற்பு !

தமிழக அரசின் நடவடிக்கைக்கு மு.க ஸ்டாலின் வரவேற்பு !


மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஆனால் 45 நாட்கள் கடந்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு மு.க ஸ்டாலின் வரவேற்பு !

ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், அவரை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அமைச்சர்களும் ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

இதற்கிடையில், மருத்துவபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு மு.க ஸ்டாலின் வரவேற்பு !

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அரசாணை மூலம் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக என தெரிவித்துள்ளார்.


newstm.in


Trending News

Latest News

You May Like