1. Home
  2. தமிழ்நாடு

விஜய்யை மறைமுகமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்... நேற்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம்..

1

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 2,800 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நேற்று பிறந்தவர்கள், நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் நான் தான் முதல்வர் என்று கூறுகின்றனர். அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்று பேசக்கூடிய நிலை உள்ளது.

நாம் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆட்சிக்கு வர வேண்டும், ஆட்சிதான் குறிக்கோள் என்ற எண்ணத்தோடு திமுக தொடங்கப்படவில்லை. ஏழைகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திமுகவை அண்ணா தொடங்கினார்” என்று பேசினார்.

மேலும், ஆணவத்திலோ அகங்காரத்திலோ மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லவில்லை. இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆட்சி, மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக திமுக ஆட்சி இருந்து வருகிறது. ஆளுநர் ஒருவர் இருக்கிறார், அப்படி ஒருவர் இருக்க வேண்டும் இருந்தால் தான் நமக்கு நல்லது. ஆளுநராக இருந்து கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய வேண்டுமோ செய்து வருகிறார். ஆளுநர் என்ற பொறுப்பு இருக்கும் வரை அந்த பொறுப்புக்கு மரியாதை கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்கள் மக்களுக்கு நன்றாக சென்று சேர்ந்துள்ளது. வரப்போகும் ஓராண்டு காலத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப் போகிறோம் என்பதை நிதிநிலை அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளோம். ஐந்து ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்து 2026 தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும். மக்கள் மத்தியில் திமுக ஆட்சிக்கு வெற்றி முகமே உள்ளது” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளிடம் இருந்து நியாயமான விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக் கொள்கிறோம். அவதூறு பரப்பும் வகையிலான விமர்சனங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like