1. Home
  2. தமிழ்நாடு

காணாமல் போன சண்டை சேவல்.. அண்ணனை குத்திகொலை செய்த பாசகார தம்பி !

காணாமல் போன சண்டை சேவல்.. அண்ணனை குத்திகொலை செய்த பாசகார தம்பி !


திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையை அடுத்துள்ள வி.கல்லுப்பட்டியில் முனியாண்டி மற்றும் சந்தோஷ் ஆகிய சகோதரர்கள் பெற்றோருடன் வசித்து வந்தனர். இருவரும் கூலி தொழிலாளர்கள் ஆவர். இதில் சந்தோஷ் சண்டை சேவல் ஒன்றை பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த சண்டை சேவல் திடீரென்று காணாமல் போனது. ஆனால் சகோதரன் முனியாண்டி சேவலை திருடி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த சந்தோஷ் அவரது அண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனியாண்டியை குத்திவிட்டு தப்பியோடினார்.

இதில் படுகாயமடைந்த முனியாண்டியை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே முனியாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணனை தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like