காணாமல் போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு !! பெற்றோர்களுக்கு வந்த மேலும் அதிர்ச்சியான தகவல்..
திருச்செந்தூர் அருகே கல்விளை இந்திராநகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் 7வயது சிறுமி. இந்த சிறுமி இன்று காலை முதல் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் வடலிவிளையில் உள்ள இசக்கி அம்மன் கோவில் அருகே உள்ள ஓடை பகுதியின் பாலத்திற்க்கு அடியில் ஒரு குழந்தையில் உடலை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிறுமியின் உதடுகளில் ரத்த காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக குழந்தை மீட்கப்பட்ட பகுதி மக்கள் கூறுவதாவது; சிறுமியின் உடல் டிரம்மில் வைக்கப்பட்டு காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தண்ணீர் டிரம்மில் சிறுமியில் உடல் இருந்ததால் சிறுமி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா , என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வந்த போலீசார்; இது குறித்து 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Newstm.in