மிஸ் பண்ணாதீங்க! 12 வருஷ பலன் கிடைக்கும்! இன்று பித்ருக்களை சாந்தி படுத்துவோம்!

ஒவ்வொரு அமாவாசையன்றும் தர்ப்பணம் தர இயலாதவர்கள் மறக்காமல் இன்று பித்ருக்களை சாந்திபடுத்துங்கள். இன்று பூசம் நட்சத்திரத்தில், அதாவது காலை 10.30 மணிக்குள் கொடுக்கப்படுகிற தர்ப்பணம் உங்களது 12 வருட பாவங்களையும், பித்ரு சாபங்களையும் போக்குகிறது. நம்முடைய அறியாமையால் செய்யும் தவறுகளால், பித்ருக்களுடைய ஆத்மா சாந்தி அடையாமல் அவதிப்படுவதால் வரக் கூடியதே பித்ரு தோஷம் எனப்படும்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் தடைபடும். கணவன் மனைவியிடையே அன்னியோன்னியம் இல்லாமல் விவாகரத்து ஏற்படலாம். சிலருக்கு குழந்தைப் பாக்கியம் இருக்காது. சிலருக்கு எப்பொழுதும் உடல் உபாதைகள் இருந்துக் கொண்டே இருக்கும்.
முறையாக பித்ரு பூஜை செய்பவர்களது ஜாகத்தில் உள்ள தோஷங்கள் அகன்று விடும் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும் நம் முன்னோர்களின் ஆன்மா இதனால் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கும். இந்த தர்ப்பணத்தை செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் வீட்டில்,ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும் செய்து வருவது நமக்கும் நம்முடைய சந்ததியினருக்கும் அளவில்லாத புண்ணியங்களையும் தரும்.
தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் விட்டவர்களுக்கு, வீட்டில் துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு, கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாமல் போனாலும், கருச்சிதைவு செய்துகொண்டாலும் இந்த தோஷம் வரும். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது என்றால் அதன் வலிமையை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடியும்.