1. Home
  2. தமிழ்நாடு

விண்வெளியில் அசம்பாவிதம்..! பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ்..!

1

ரஷியாவால் கடந்த 2022-ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது வெடித்து ஆயிரக்கணக்கான துகல்களாக சிதறியுள்ளது.அந்த செயற்கைக்கோள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அருகே திடீரென வெடித்து சிதறியது.இதனால் அதில் இருந்து ஆயிரக்கணக்கான துகல்கள் சிதறி, சர்வதேச விண்வெளி மையத்தை தாக்கும் ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். ரஷ்ய செயற்கைக்கோள் வெடித்து சிதறியதால், மிகப்பெரிய அளவிலான குப்பைகள் விண்வெளியில் சேர்ந்துள்ளன.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாவது,ரஷியா செயற்கைக்கோள் தற்போது வெடித்து ஆயிரக்கணக்கான துகல்களாக சிதறியுள்ளது.இதன் நூற்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ரேடாரில் புலப்பட்டது. செயற்கைக்கோள் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் விண்வெளி நிலையத்தை தாக்கும் ஆபத்து ஏற்பட்டதால் விண்வெளி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனா் என தெரிவித்துள்ளனர்.

ஆபத்து நீங்கியதும் விஞ்ஞானிகள் மீண்டும் பணியை தொடங்கியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தற்போது விண்வெளியில்தான் உள்ளது. சுனிதா வில்லியம்ஸ் சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோருடன் கடந்த 5 ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றார்.

விண்வெளியில் ஒரு வாரம் தங்கி சில பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஜூன் 14 ஆம் தேதிக்கு பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 26ஆம் தேதி திரும்புவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சிக்கல் ஏற்பட்டதால் அவர் திரும்புவது மீண்டும் தாமதமானது.

தற்போது வரை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு எப்போது திரும்புவார் என்ற தேதி உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும்போதே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like