1. Home
  2. தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி சவாலும்... எடப்பாடி பழனிசாமி பதிலும்... காரசார விவாதம்..!

1

தமிழ்நாடு முழுவதும் நேற்று  காலை 9 மணி முதல் 5 மணி வரை திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மறுபக்கம் அதிமுக மதுரையில் மாநாடு நடத்தியது.இந்த மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக மாநாடு குறித்து பேசியபோது, அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.“இந்த மாநாட்டில், ஒன்றிய பாஜக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானங்கள் போடுங்கள் பார்ப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

 எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை.உங்கள் அதிமுக இளைஞரணி செயலாளரை அனுப்பி வையுங்கள். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துக்கொள்ளலாம். எல்லோரும் சேர்ந்து டெல்லிக்குச் செல்வோம். பிரதமர் வீடு முன்பு போய் உட்காருவோம். அப்படி நீட் தேர்வு ரத்தானால் அதிமுகவால் தான் நீட் ரத்தானது என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இதைச் செய்யுங்கள். உங்களிடம் இதை எதிர்பார்ப்பது கடினம் தான் என காட்டமாக பேசினார். 

மறுபக்கம் மதுரையில் மாநாட்டில் திமுகவின் உண்ணாவிரதம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீட் நுழைவுத் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறது. உதயநிதி ஒரு நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார். 2010ல் டிசம்பர் 21 அன்று மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் தேர்வு குறித்து நோட்டிஃபிகேஷன் வெளியிட்டது. அப்போது மத்தியில் திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.காந்தி செல்வன் இணையமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் நீட் தேர்வு வந்தது. இது ரெக்கார்டு. யாராலும் மறைக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது.இன்று எவ்வளவு ஏமாற்று வேலை காட்டுகிறார்கள். உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய நாடகம். 2021 வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய முதல் கையெழுத்து போடப்படும் என்றார் ஸ்டாலின். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

உதயநிதியும் நீட் ரத்து செய்யப்படும் என்றார். ஆனால் செய்யவில்லை. மானம், வெட்கம், சூடு, சொரணை இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்.மாணவர்களை ஏமாற்றாதீர்கள் ஸ்டாலின். நீட்டை கொண்டு வந்தது திமுக. அதை தடுக்க போராடியது அதிமுக. இதை மறைத்து போராடுகிறார்கள். மக்கள் திமுக மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக” என்று விமர்சித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like